#சீமான்_வாழ்க்கை_வரலாறு யார் இந்த சீமான்? SEEMAN Full Bio-data சீமான் பற்றிய தகவல்கள்!
சீமான் பற்றிய
முழுமயான தகவல்கள்
1966 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள அரணையூர் என்ற சிற்றூரில் திரு.செந்தமிழன், திருமதி.அன்னம்மாள் தம்பதியருக்கு மகனாய் பிறந்தார்.இயற்பெயர் சீமான்.
![]() |
சீமானின் வீடு - அரணையூர் |
![]() |
சீமானின் வீட்டு முற்றம் |
![]() |
அரணையூர் விளையாட்டுத்திடல் |
![]() |
வீட்டில் சீமானின் தாய்தந்தை |
![]() |
![]() |
அரனையூரில் சீமான்.... |
![]() |
கராத்தே உடையில் சீமான் |
சீமானின் சினிமா பயனம்

![]() |
அமைதிப்படை படத்தில் சீமான் இப்படத்தின் இரண்டாம்பாகம் 2013 ஆம் ஆண்டு மணிவண்னனால் இயக்கப்பட்டது |
![]() |
கவிஞர் தாமரையுடன் சீமான் |
மணிவண்ணனுடன் சீமானின் நட்பு1995 - 2013 மணிவண்ணன் சீமானின் பதினெட்டு ஆண்டுகால நட்பு சினிமாதுறையில் குறைவு ஆனால் அரசியல் ரீதியாக இருவரும் மிகுந்த நெருக்கம் உடையவர்கள். மணிவண்ணனின் கல்லூரி நண்பரான சத்தியராஜ், மற்றும் நண்பர் சீமான், இருவரும் தமிழ்தேசிய கருத்தினை கொண்டவர்கள்.ஆனால் மணிவண்ணன் 2009 வரையிலாக திராவிடகருத்தியலை மட்டுமே ஆதரித்துவந்தார் பின்னர் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். மூவருக்கும் இடையிலான நட்பு விடுதலைப்புலிகள் ஆதரவு நிலைப்பாட்டில் வழுபெற்றது. 03.07.2011 நாம் தமிழர் கட்சி நிகழ்வில் மணிவண்ணனின் உரையாடல் மேலும் தகவலுக்கு ; https://www.youtube.com/watch?v=rO7VJ2ubkA0 மணிவண்ணன் 15 ஜூன் 2013 அன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார் ![]() |
மணிவண்ணன் உடல் புலிக்கொடியால் மூடப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது |
==============================================================================================================================================
சீமானின் அரசியல் பாதை
நெய்வேலி முற்றுகை பேரணி
![]() |
நிதர்சனத்தில் வெளிவந்த சீமானின் கட்டுரை |
![]() |
2004 விடுதலைப்புலி பிரபாகரனின் 50-வது பிறந்தநாள் நிகழ்வு ''நிதர்சணம்'' காணொளியில் சீமான் சீமான் விடுதலை புலிகள் சந்திப்பு |
![]() |
புலிகளின் பொறுப்பாளர்களுடன் சீமான் |

2006 ல் இவர் இயக்கிய ''தம்பி'' திரைப்படம் சிறப்பான வெற்றியை பெற்றது. தம்பி திரைப்படம் இளைஞர்களை எழுச்சியூட்டும் விதமான காட்சிகளை கொண்டிருந்தது . ''வன்முறை மீது விருப்பமற்ற ஒருவன் மீது, வன்முறை ஏவப்பட்டால் என்ன நடக்கும்'' என்பதை கதையின் கருவாக அமைத்திருந்தார். பிரபாகரனை ஈழத்தமிழர்கள் அழைக்கும் ''தம்பி'' என்ற பெயரை படத்திற்கும் , ''தம்பி வேலு'' என்ற பிரபாகரனின் பெயரையே (தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன்) கதாநாயகனுக்கும் சூட்டியிருந்தார்.தனித்தமிழில் உரையமைத்த்தற்காக தமிழ்நாடு அரசின் ''சிறந்த உரையாசிரியர்'' விருது சீமானுக்கு கிடைத்தது.
கருஞ்சட்டைத் தமிழர் மாத இதழ் வெளியீடு
- 2007ஜூலை 26 - சென்னை, அரசர் அண்ணாமலை மன்றத்தில் கருஞ்சட்டைத் தமிழர் மாத இதழ் வெளியிடப்பட்டது. மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த அவ்வரங்கில் மு.க.ஸ்டாலின் முதல் இதழை வெளியிட, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு அதனைப் பெற்றுக் கொண்டார். கவிஞர் மு.மேத்தா, தென்கச்சி கோ. சுவாமிநாதன், வழக்கறிஞர் அருள்மொழி, சீமான், மும்பை அப்பாத்துரை ஆகியோர் இதழை வாழ்த்தி வரவேற்றுப் பேசினர். இதழின் ஆசிரியர் சுப.வீரபாண்டியன் ஏற்புரை கூறினார். பொள்ளாச்சி உமாபதி வரவேற்புரையாற்ற, தமிழ் முழக்கம் சாகுல் அமீது நன்றியுரை கூற, எழுச்சியுடன் நடைபெற்ற விழா நிகழ்ச்சிகளைக் கவிஞர் சாவல்பூண்டி சுந்தரேசனும், அன்புத் தென்னரசனும் தொகுத்து வழங்கினர். கயல் தினகரன், இயக்குனர் செல்வபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
''எந்த மத நூலும், எந்த இதிகாசப் புராண நூலும் இந்த மனித இனத்தை படிக்கச் சொன்னதே கிடையாது. படிக்கச் சொன்னவன் என் முப்பாட்டன் திருவள்ளுவர்தான். அவர்தான் தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு ன்னு சொன்னான்''.
- என்று ஆவேசமாக பேசினார் சீமான்
மேலும் தகவலுக்கு;கருஞ்சட்டை தமிழர்
- 2007கனடாவில் தேசியத் தலைவரின் 53 ஆவது பிறந்த நாள் விழா: இயக்குநர் சீமான் பங்கேற்றார்.கனடிய "ஈழமுரசு" பதிப்பு நடத்திய தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 53 ஆவது பிறந்த நாள் விழாவில் சீீீமானை "ஈழமுரசு" குடும்பத்தினர் கனடாவில் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
- 2007 ராஜ் தொலைக்காட்சி பட்டிமன்ற நிகழ்வில் பீடி,சிகரட்,போன்ற போதைப்பொருட்களையும் பெப்சி,கோக் போன்ற அந்நியகுளிர்பானங்களையும் எதிர்த்து பேசினார்
======================================================================
சீமானின் ரஜினி எதிர்ப்பு
- 2008 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட கன்னடர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 04.04.2008 ல் சென்னை சேப்பாக்கத்தில் தமிழ் திரையுலகத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய சத்தியராஜ்
இதனை தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த்
அவரை காட்டுக்குள் வைத்திருந்த ஒவ்வொரு நாளும் எனக்குத்தூக்கம் இல்லை. அவரது வனவாசம் முடிந்துவிட்டது. இதுவரை கர்நாடக மக்களுக்கு மட்டுமே பரிச்சயமான ராஜ்குமார் இப்போது உலகப் புகழ் பெற்றுவிட்டார்.
![]() |
Add caption |
சீமான் கருணாநிதி சந்திப்பு
மேலும் தகவலுக்கு: சீமான் கருணாநிதி சந்திப்பு
======================================================================
சீமானின் இராமேஸ்வர உரைவீச்சு
- 2008 இராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் ஈழப்போரில் இலங்கைக்கு ஆதரவளித்த இந்திய அரசுக்கு , எதிராக சீமான் பேசியபேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொலைக்காட்சியில் சீமானின் பேச்சைக்கேட்டு விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் சீமானுக்கு தொலைப்பேசியில் வாழ்த்து தெரிவித்ததாக சொல்லப்பட்டது .சீமானின் மற்ற மேடைகளினின்று இந்த இராமேஸ்வர மேடை தனித்து காணப்பட்டதற்கு காரணம் தமிழ்நாட்டில் ''தமிழ்தேசியம்'' பிறந்துவிட்டதாக மேடையில் சீமான் முழங்கியதுதான். (இராமேஸவரம் உரை) இந்த பேச்சிற்காக காங்கிரஸ் - திமுக அரசால் கைதும் செய்யப்பட்டார். எதிர்க்கட்சியான ஆதிமுக-வும் சீமானை கைதுசெய்யும்படி சட்டமன்றத்தில் தனது எதிர்ப்பினை பதிவுசெய்தது.
- 2008 ஈரோட்டில் (14.12.2008) தமிழ் தேசியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில், `தமிழர் எழுச்சி உரை வீச்சு' என்ற தலைப்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தமிழக காங்கிரஸார் குற்றம் சாட்டினர், இதனைத்தொடர்ந்து 19.12.2008 ல் சீமான், பெ.மணியரசன், கொளத்தூர்மணி ஆகிய மூவர் கைதுசெய்யப்பட்டனர்
கார் எரிப்பு செய்தி கிடைத்தவுடனேயே கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே வத்தலகுண்டுக்கு அருகே ஜி.கல்லுப்பட்டி எனும் ஊரில் சீமானை காவல்துறை கைது செய்தது. தொடர்ந்து மேட்டூரில் தனது இல்லத்தில் இருந்த கொளத்தூர் மணியையும், அடுத்த நாள் சென்னையிலிருந்த பெ.மணியரசனையும் காவல்துறை கைது செய்தது. ஈரோடு கருங்கல் பாளையம் காவல் நிலையத்தின் சிறப்பு போலீஸ்படை இக்கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்திய தண்டனை சட்டம் 13-1(பி) மற்றும் 505 வது பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.
ஈரோடு கூட்டத்தில் சீமான், ராஜீவ் காந்திக்கு எதிராக ஆத்திரமூட்டும் உரை நிகழ்த்தியதாக மொடக்குறிச்சி காங்கிரஸ்சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.பழனிச்சாமி காவல் நிலையத்தில் தந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அரசின் சிறப்புப் புலனாய்வுக்குழு தந்த அறிக்கையின் அடிப்படையில் சட்ட நிபுணர்களின் கருத்தைக் கேட்டு, அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் கூறின.
சான்று ; சீமான் கைது
சீமான் உட்பட மூவரை கைதுசெய்ததை எதிர்த்து தமிழ்தேசிய பொதுவுடைமைக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் 20.12.2008 |
- 2008 டிசம்பர் 18ம் தேதி சீமான் வீட்டு முன்பு நின்றிருந்த என்டீலர் காரின் பின் டயரை காங்கிரஸ் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிறந்தநாள் போஸ்டர்களை ஒட்ட சென்ற காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் எரித்தனர்.சீமான் சார்பாக காவல்நிலையத்தில் வழக்கறிஞர் ஒருவரால் புகார்மனு ஒன்று அளிக்கப்பட்டது.
சீமான் கைதும் மணிசெந்தில் கட்டுரையும்
ஆழ ஆழ அது செல்கையில்
உயர உயர எழுகிறது
அதன் வால்!
(ஜென் கவிதை) -யோஸா பூஸன்.
கால வரலாற்றில் தேவை ஏற்படும் இயற்கையே தனக்காக தேவையை தானே உருவாக்கும். அப்படித்தான் அண்ணன் சீமான் உருவாகியுள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக சுதந்திர நாட்டில் தனது இனமானத்திற்கான கருத்தைப் பேசியதால் புதுச்சேரியின் நெடிய சிறை மதிர்ச்சுவர்களுக்கு ஊடே, பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களுக்கு மத்தியில் எல்லாவிதமான சுதந்திரங்களும் மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இணையத் தமிழர் இயக்கம் சார்பாக 2-04-09 அன்று அண்ணன் சீமானை காண செல்ல வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நான், தோழர் விஷ்ணுபுரம் சரவணன், ஒட்டக்கூத்தர், கவிஞர்.கண்ணகன், இணையத்தளங்களில் புதிய தமிழுணர்வாளராக உருவாகி வரும் வினோபா உட்பட தமிழுணர்வாளர்கள் புதுச்சேரிக்கு பயணமானோம். புதுவையில் அண்ணன் சீமானைக் காண புறப்பட்டபோது அருமைத் தோழர் நெல்லை அருள்மணி மதியம் 2 மணிக்கு வந்தால் அண்ணனை சந்திக்கலாம். இன்று வியாழக்கிழமை. ஆதலால் அனைவருக்கும் அனுமதி உண்டு என்ற மகிழ்வான தகவலைத் தந்தார். நாங்கள் சரியாக 1.50 மணிக்கு சிறை வாசலுக்கு சென்று விட்டோம். அங்கு எங்களை தோழர் ஓட்டக்கூத்தர், பெரியார் திக அண்ணன் லோகு. அய்யப்பன், நெல்லை அருள்மணி ஆகியோர் எங்களை வரவேற்றனர். அங்கு சென்றவுடன் அண்ணன் சீமானைப் பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்ற தகவல் எங்களை பேரிடியாக தாக்கியது. தமிழ் பெரியவர் இறைக்குருவனார், இயக்குநர் அமீர் மற்றும் சீமானின் குடும்பத்தினர் யாவரும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வெளியே காத்திருந்தனர்.
நான் சிறை வெளிவாயிலில் இருந்த வாயிற்காவலரிடம் அண்ணன் சீமானை காணவேண்டும் என்று கூறி அனுமதி கோரும் விண்ணப்ப படிவத்தினை கேட்டேன். மிகுந்த இறுக்கமான குரலில் யாருக்கும் அனுமதி கிடையாது என்று காவலர் கூறினார். நான் உங்கள் மேலதிகாரிகளிடம் பேச வேண்டும் என்று கேட்டபோது எனக்கு அதே இறுக்கமான பார்வை மட்டுமே பதிலாக கிடைத்தது. பெரியார் தி.க அமைப்பாளர் அண்ணன் லோகு.அய்யப்பன் எங்களை எப்படியாவது உள்ளே அனுப்ப எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருந்தார். புதுவை மாநில சிறைத்துறை ஐ.ஜிக்கு அண்ணன் லோகு அய்யப்பன் அலைபேசியில் பேசி தோல்வி அடைந்த நிலையில், என்னைப் பேசச் சொல்லி அலைபேசியை அளித்தார். கிட்டத்தட்ட அந்த வேற்று மாநில சிறைத்துறை அதிகாரியிடம் நான் எவ்வளவு பேசியும் யாருக்கும் அனுமதி கிடையாது என்றும், தேர்தல் ஆணையத்திடமிருந்து சீமானை பார்க்க வரும் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு வந்துள்ளதாகவும், ஒரு வாரத்தில் மூன்றே மூன்று பேருக்குத்தான் அனுமதி என்றும் கண்டிப்பாக கூறினார். மேலும் நேற்றைய தினம் வந்த பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன் மற்றும் பாமக தலைவர் கோ.கா.மணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டதை சொல்லி மறுத்தார்.
பிறகு என்னை நான் வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகும் இதே இழிபறி நிலை நீடித்தது. ஒரு ஜனநாயக நாட்டில், அனைத்து சுதந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக சட்டம் சொல்லியுள்ள ஒரு நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஒரு நபரை அவரது வழக்கறிஞர்கள் சந்திக்க உரிமை உண்டு என்றும் மறுக்கும் பட்சத்தில் இது குறித்து தமிழுணர்வாளர்கள், வழக்கறிஞர்கள் மீண்டும் போராட துவங்குவார்கள் என்றும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்படும் என்றும் கடுமையான குரலில் நானும் விவாதிக்க ஆரம்பித்தேன். இருவருக்கும் காரசாரமான விவாதங்கள் நீண்டு கொண்டே இருந்தன. பிறகு அரைமணி நேரம் தொடர்ந்த உரையாடலின் முடிவில் வழக்கறிஞர்களை மட்டும் வழக்கு குறித்துப் பேச அனுமதிப்பதாக சலிப்பான குரலில் கூறினார்.
எங்களுடன் வந்திருந்த தமிழுணர்வாளர்கள் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தனர். பிறகு அங்கு இருந்தவர்கள் முதலில் வழக்கறிஞர்கள் என்ற முறைமையில் மணி.செந்திலும், வினோபாவும் மட்டுமாவது பார்த்து வரட்டும் என்று முடிவு எடுத்தனர். தோழர் நெல்லை அருள்மணி அங்கு இருந்த அனைவரிடமும் இருந்த புத்தகங்களைப் பெற்று என்னிடம் அளித்தார். தமிழ்ப் பெரியவர் இறைக்குருவனார் தான் எடுத்து வந்த பெருஞ்சித்திரனார் புத்தகங்களை ஏமாற்றத்துடன் கண்கள் பனிக்க என்னிடம் அளித்தார்.
சீமான் என்பவர் தனி மனிதன் அல்ல. தன் சொந்த சகோதர சகோதரிகளை காப்பாற்ற வழி தெரியாமல் தனக்குள்ளேயே சிதைந்து கொண்டிருக்கும் ஒரு தேசிய இனத்தின் குரல் என்பதை அங்கு நின்ற தமிழ்உணர்வாளர்கள் அனைவரும் நிரூபித்துக் கொண்டிருந்தனர். நானும், வினோபாவும் அவசர அவசரமாக புத்தகங்களை எடுத்துக் கொண்டு சிறையின் மிகப் பெரிய வாயிற் கதவின் வழியே உள் நுழைந்தோம்.
நான் பிறந்தது முதல் இனத்திற்காக எவ்வித சமரசமுமின்றி போர்க்குரல் கொடுத்து, அனைத்து அதிகார மையங்களுக்கும் தன் வீரம் செறிந்த உரைகளினால் பெரும் அச்சுறுத்தலாக திகழ்ந்துக் கொண்டிருக்கும் சாசகம் நிறைந்த ஒரு புரட்சியாளரை சந்திக்க போவது இதுதான் முதல் முறை. இன்று காலை நான் குடந்தையில் இருந்து கிளம்பியது முதலே மிகுந்த உணர்வுவயப்பட்ட நிலையில் இருந்தேன்.
அண்ணனை சிறையில் காணப்போகும் ஆவலும், உணர்வும் என்னை வெகுவாக ஆட்டிப்படைக்க சிறைச்சாலையின் இரண்டாவது மிகப்பெரிய இரும்பு கதவுகளுக்கு முன்னால் போய் நின்றேன். கூட வந்த வினோபா அங்கிருந்த காவலரிடம் நாங்கள் வந்திருக்கும் நோக்கம் பற்றி சொன்னார். அதற்கு அங்கிருந்த யாரிடமும் எவ்வித பதிலுமில்லை. அதிகாரிகள் இல்லை என்றும், வழக்கறிஞர்கள் சந்திப்பது குறித்து அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் மீண்டும் எங்களைத் தடுக்க துவங்கும் முயற்சியில் இறங்கியது புதுவை சிறைத்துறை. மீண்டும் அங்கேயும் விவாதம். அண்ணன் சீமானைப் பார்க்காமல் நாங்கள் சிறையை விட்டு வெளியே வர மாட்டோம், எங்களையும் இங்கேயே அடையுங்கள் என்று நாங்கள் இருவரும் உரத்தக் குரலில் விவாதிக்க துவங்கினோம். நேரம் ஆகிக் கொண்டு இருந்தது. அங்கிருந்த அதிகாரிகள் உள்ளே போவதும், வருவதுமாக இருந்தனர். ஆலோசனைகள் செய்தனர். நாங்களும் தளராமல் அதிகார மையத்தின் அனைத்துப் பிரிவுகளோடும் போராடிய வண்ணம் நின்று கொண்டிருந்தோம்.
இறுதியாக சீருடை அணியாத ஒரு அதிகாரி நீங்கள் போய் பார்க்கலாம். ஆனால் நிபந்தனை.. புத்தகங்கள் கொடுக்க கூடாது. வழக்கைப் பற்றி மட்டும் தான் பேச வேண்டும் என்றார்.
என்னால் இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. புத்தகங்கள் கூட கொடுக்க கூடாதென்றால்.... அப்படியென்ன சீமான் யாரும் செய்யக் கூடாத கடும் குற்றத்தை செய்து விட்டார் .. இனத்திற்காக, இன அழிவினைக் கண்டித்து ஒருவன் குரல் எழுப்பினால் அவ்வளவு பெரிய குற்றமா.. என்றெல்லாம் கத்திக் கொண்டிருந்தேன். அதற்குள் கூட வந்த வினோபா முதலில் அண்ணனைப் பார்த்து விடுவோம். மீதத்தை வந்து வைத்துக்கொள்ளலாம் என்றார். அனைத்து விதமான பரிசோதனைகளுக்கு மத்தியில்... எங்களது அலைபேசிகள் வாங்கப்பட்டன.
இறுதியாக எளிதாக திறக்காத அந்த மாபெரும் அடக்குமுறையின் சின்னமாய் உயர்ந்திருந்த இரும்புக் கதவு தந்தை பெரியாரின் வியர்வையினால் எங்களுக்கு கிடைத்த கல்விக்காக திறந்தது. உள்ளே மங்கலான வெளிச்சம். வரிசையாக அதிகாரிகளின் அறைகள். வேக வேகமாக நடந்து செல்லும் போதே ஒரு அறையில்.. வாருங்கள் வழக்கறிஞர்களே... என்ற குரல்..
தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று எந்தக் குரல் உணர்வூட்டியதோ... என் தமிழுக்கு எதிரியை நிர்மூலமாக்கி சிதற அடிக்கும் வல்லமை உண்டு என்று எந்த குரல் நிருபித்ததோ.. பெரியாரையும், அம்பேத்காரையும், காரல் மார்க்ஸையும், தலைவர் பிரபாகரனையும் ஒரே அலைவரிசைக்குள் கொண்டு வந்து எந்த குரல் அசத்தி உயர்த்திக் காட்டியதோ.... மங்கி மக்காய் கிடந்த தமிழனை தன் அதட்டலால் எந்த குரல் மானமுள்ள போராளியாக்க துடித்ததோ ... அதே குரல்...
குரல் கேட்டவுடன் எனக்கு முன்னால் பாய்ந்து போனார் வினோபா. அந்த நொடியிலேயே என் கண்கள் கலங்கத் துவங்கி விட்டன. தவிப்புடன், பதைபதைப்புடன் நானும் அந்த அறைக்குள் போனேன்.
அங்குதான்.. தாயகத் தமிழகத்தில் இந்த தலைமுறையின் தன்னிகரற்ற போர் முரசு அண்ணன் சீமான் நின்றுக் கொண்டிருந்தார். எனக்கு முன்னால் சென்ற வினோபா கைக் குலுக்கி கொண்டே நின்றார். நான் ஆச்சர்யமும், தவிப்பும், பதைபதைப்பும்... இன்னும் பிற அனைத்து விதமான உணர்வு கலவைகளோடும் நின்றுக் கொண்டிருந்தேன். ஒரு நொடி உற்று நோக்கிய பிறகு அண்ணன் வாடா என்று சொன்னதுதான் தாமதம்.. பாய்ந்து கட்டி அணைத்தேன். என் கண்களில் நான் தேக்கி வைத்திருந்த கண்ணீர் உடைந்துக் கொண்டு வெள்ளமென பாய்ந்தது.
ஒரு சிறைச்சாலையில்... சிறையில் அடைக்கப்பட்டவரை பார்க்கப் போன ஒரு வழக்கறிஞர் உணர்வினால் உந்தப்பட்டு கண்ணீர் சிந்துவதும், உணர்ச்சி வசப்படுவதும் என் தொழில் நியதிகளுக்கு முரணானதுதான். ஆனால் நான் அந்த இடத்தில் வழக்கறிஞராகவோ, அதிகாரத்தின் கரங்களுக்குள் சிக்கிக் கொண்டவரை மீட்கப் போன மீட்பராகவோ... இருக்க முடியவில்லை. மாறாக அனைத்து விதமான சூழ்ச்சிகளுக்கும் சிக்கிக் கொண்டு, தன் கண் முன்னால் சொந்த சகோதர சகோதரிகளை பறிக்கொடுத்து... எல்லாவிதமான அரசியல் பித்தலாட்டத்தனங்களிலும் விற்கப்பட்டு... மீறி எழும் இனமான உணர்வினையும்.. சுய வாழ்க்கை நிர்பந்தங்களுக்காக அடக்கி, அடங்கிக் கிடந்த ஒரு தேசிய இனத்தின் உக்கிர வலியாய்... சூழ்ந்திருக்கும் இறுகிய இருட்டினில் துடித்தெழுந்த வெளிச்சத் தெறிப்பாய்... அண்ணன் சீமானின் தம்பியாகத்தான் என்னால் இருக்க முடிந்தது.
என் புலன்கள் என்னையும் மீறி... ஆதிச்சுழியாய்.. சுனையாய் என்னுள் சுரந்து கொண்டிருக்கும் என் இன மூதாதையின் மிச்சமாய் இன்னும் என்னுள் ஒளிந்திருக்கும் உணர்வின் தொடர்ச்சிகளில் என்னை நான் ஒப்புக் கொடுத்துவிட்டேன். அண்ணனும் கலங்கி.. நானும் கலங்கி இருவரும் எங்களுக்குள் இருந்த நெருக்கத்தை உணர்ந்த அற்புத தருணம் அது.
அப்பா.. எப்படியிருக்கார்.. திமுககாரர் .. அவரிடம் வம்பு வளர்க்காத.. பாவம்டா அவரு.. என்று என் தந்தையைப் பற்றி நலம் விசாரிக்க துவங்கிய அண்ணன்.. அறிவுமதி அண்ணனைப் பற்றி பேச துவங்கியவுடன் மெளனமாக என்னை உற்று நோக்கினார். அண்ணனை பத்திரமாக பார்த்துக்குங்கடா... தினந்தோறும் தொலைபேசியில் அவருடன் பேசி அவரைத் தேற்று என்றார். தோழர் பாமரனின் விசாரித்தல்களை சொன்னபோது அவர் மிகவும் உற்சாகமாக பாமரனை பற்றி விசாரிக்க துவங்கினார்.
எங்களைச் சுற்றிலும் காக்கி உடைகள் நாங்கள் பேசுவதை, கலங்குவதை கவனித்துக் கொண்டும், பதிவு செய்துக் கொண்டும் இருந்தன... நான் படித்த சட்டமும், பட்டமும் என் வாழ்நாளில் எனக்கு மிகவும் உபயோகப்பட்ட தினமாய் இதை நான் கருதுகிறேன் என்று அண்ணனிடம் சொன்னேன். அதற்கு அண்ணன் சிரித்தார்.
சிறை ஒரு மனிதனை உளவியல் ரீதியில் பலவீனப்படுத்தி, சீர்குலையச் செய்யும் என்பதை சீமான் முற்றிலும் பொய்யாக்கிக் கொண்டு இருந்தார். அவருடைய வருத்தமெல்லாம் ஒட்டுப் பொறுக்கி அரசியலில் சிக்கிக் கொண்டு ஈழத்து அவலங்களுக்கான தார்மீக எதிர்ப்புக் குரல் மங்கி விட்டதே என்று. தனக்கு யார் குறித்தும் வெறுப்போ, வருத்தமோ இல்லை என்றார் அண்ணன் சீமான். இன்று இன எதிரிகளை வெற்றிப் பெற விட்டோமானால் எதிர்காலம் என்ற ஒன்றே இந்த இனத்திற்கில்லை என்பதை நாங்கள் இருவரும் பகிர்ந்து கொண்டோம். மேலும் உலகமெல்லாம் இருக்கின்ற தமிழுணர்வாளர்களை ஒரு இழையில் கொண்டு வர இணையத்தமிழர் இயக்கம் துவங்கப்பட்டுள்ளதை மகிழ்வுடன் கேட்டார். உலகத் தமிழர்களுக்கும், இயக்கத்திற்கும் தன்னுடைய அன்பினையும், வாழ்த்துக்களையும் உவகையோடு சொன்னார் அந்த மாமனிதன். விடுதலைக்கு பிறகு செய்ய வேண்டிய பணிகள் குறித்து வினோபா பேசினார்.
வெளியே பலரும் காத்துக் கொண்டிருக்கிற விபரமும், அவரது அண்ணன் மகள் யாழினி பிறந்த நாள் வாழ்த்து பெற வந்திருப்பதையும் அண்ணனிடம் சொன்னபோது அவரின் முகம் இறுகியது.
சுற்றி நின்ற காவலர்களைப் பார்த்து ஏன் இப்படி என்னையும், என்னைப் பார்க்க வருகின்றவர்களையும் நடத்துகிறீர்கள்... அடிப்படை உரிமை கூட எனக்கு மறுக்கப்படுகிறது. தனிமைச் சிறை. புத்தகங்கள் கூட அனுமதிக்கப்படவில்லை.. பார்வையாளர்களை அனுமதிப்பதில்லை. முதலில் வியாழக்கிழமை என்றீர்கள். இப்போது வியாழக்கிழமை 3 பேர் மட்டும் அனுமதி என்கிறீர்கள். என் குடும்பத்தை பார்க்கக்கூட எனக்கு அனுமதியில்லை. .ஏன் இப்படி அனைத்து சட்ட விதிகளுக்கும் புறம்பாக நடந்துக் கொள்கிறீர்கள் என அண்ணன் கேட்டார்.
அந்த சிறைச்சாலையில் அண்ணன் சீமானுக்கு உடற்பயிற்சி செய்யவும், நடைப்பயிற்சி போகவும் கூட அனுமதியில்லை. தமிழினத்திற்காக மிகப் பெரிய கட்டுப்பாடுகள் என்ற பெயரில் நடத்தப்படும் கொடுமைகளுக்கு உள்ளாகி வருகிறார் அண்ணன் சீமான். எல்லாவிதமான அடிப்படை மனித உரிமைகளும் அவருக்கு அங்கே மறுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் அவருக்கு மட்டும் சிறப்பு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக அங்கு உள்ள காவலர்கள் தெரிவித்தனர். அந்த உத்திரவின் நகலை கேட்டதற்கு அதையும் தர மறுத்து விட்டனர்.
இதற்குள் வெளியே நின்ற விஷ்ணுபுரம் சரவணன், ஒட்டக்கூத்தர் உள்ளிட்ட தமிழுணர்வாளர்கள் வாயிலை மறைத்து போராட்டத்தை துவக்கி இருந்தனர். அதை தூரத்தில் இருந்து அந்த அறையில் இருந்த மிகச்சிறிய ஜன்னல் மூலம் அண்ணன் சீமான் பார்த்தார். அவர் மேலும் உணர்ச்சிவயப்பட துவங்கினார். என்னை பார்க்க வரும் என் உறவுகளை ஏன் இப்படி நடத்துகிறீர்கள்.. ஏன் அனுமதி மறுக்கிறீர்கள் என்று காவலர்களிடம் அவர் கேட்டபோது அவர்களிடம் பதிலில்லை.
எதற்கும் அவர்களிடத்தில் பதில் கிடையாது. பதில் தர வேண்டிய அதிகாரிகள் யாரும் அங்கில்லை.
அவரது அண்ணன் மகள் யாழினிக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை ஒன்று எழுதி வைத்திருந்தார். அந்த தாளை என்னிடம் அளித்து, கொண்டு சென்று என் மகளிடம் கொடு என்றார். நானும் அதை பெற்று மடித்த போது.. மடிக்காமல் கொண்டு செல் என்றார் அந்த மயிலிறகு மனசுக்காரர்.
நேரம் ஆகி விட்டது என அலுவலர்கள் தெரிவித்தனர். அண்ணனிடம் மீண்டும் கைக்குலுக்கி கொண்டோம். வீட்டில் உன் மகனிடம் பெரியப்பா விசாரித்தான் என சொல் என்று சொன்ன அந்த நேசமிகு உறவினை கண்கள் பனிக்கப் பார்த்து விட்டு மெதுவாய் அறையை விட்டு வெளியே வந்தேன்.
வெளியே அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். நான் வெளியே நின்ற அதிகாரிகளிடம் அவர் நம்மை நேசித்த குற்றத்திற்காக உள்ளே இருக்கிறார். எனக்காகவும், உங்களுக்காகவும் தான் அவர் பேசினார். அந்த மாபெரும் மனிதனை உரிய மதிப்போடும், உரிமைகளோடும் நடத்துங்கள் என்றேன்.
என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. மீண்டும் அறைக்குள் சென்றேன். அண்ணன் சீமான் அமைதியாய் அமர்ந்திருந்தார். என்னடா தம்பி என கேட்டார். மீண்டும் அந்த மகத்தான சகோதரனை மீண்டும் இறுக்க கட்டி அணைத்தேன்.. நீங்கள் எங்களுக்கு வேண்டும்.. கொள்கையாய்.. வழிகாட்டியாய்.. ஆசானாய்.. உறவாய் என்றேன்.
கண்டிப்பாக.. என் வாழ்க்கை என் தம்பிகளுக்காகத்தான் என்றான் அந்த பாசமிகு அண்ணன்.
சிறை வெளியே தோழர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தனர். நான் சீமானின் அண்ணன் மகள் யாழினிக்கு அவர் அளித்த கவிதையினை வாசித்து காண்பித்து அளித்தேன். அந்த பெண்ணும், அவரது தாயாரும் கதறி அழுதனர்.
தோழர்களின் போராட்டம் வலுக்கவே..இறுதியாக மூவருக்கு மட்டும் பலவிதமான கெடுபிடிகளோடு அனுமதி தந்தது புதுவை சிறைத்துறை. இயக்குனர் அமீர், இறைக்குருவனார், யாழினி ஆகியோர் மட்டும் உள்ளே சென்று பார்த்து விட்டு வந்தனர்.
எல்லாவித உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில் தேர்தலை மட்டுமே மனதில் வைத்து சீமானை சிறையில் அடைத்து வைத்திருக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்ற அடிப்படை உரிமைக்கு எதிராக சீமானின் சிறை வாசம் இருக்கிறது. காங்கிரஸ்க்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்ல கலைஞர். மு.கருணாநிதிக்கு உரிமை இருக்கிறது என்றால்... ஓட்டு போடாதீர்கள் என்று சொல்ல சீமானுக்கு உரிமை இல்லையா..?
விடுதலைப்புலிகளுக்கு எதிராக காங்கிரஸ் முழங்கலாம் என்றால்.... அதை ஆதரித்து சீமான் முழங்கக்கூடாதா? இந்த நாட்டில் துரோகி கருணாவைப் பாராட்டி பேசினால் தவறில்லை. இந்த நாட்டின் எம்.பி. தனது மகளின் திருமணத்திற்காக இன எதிரி ராஜபக்சேவை அழைத்து வந்தால் தவறில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளுக்காக ஒருவன் பேசினால் அது தவறு. உரிமைகளுக்காக ஒருவன் முழங்கினால் அது தவறு.
மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் தமிழ்நாட்டு அறிவுலகத்தீரே... தூக்கு தண்டனையை நீக்க குரல் கொடுக்கும் கணவான்களே.. காஷ்மீருக்கு எல்லாம் சென்று ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களே... ஏனய்யா.. .உங்கள் கண்களில் சீமானின் கைது சிக்க மாட்டேன் என்கிறது.. அந்த மனிதன் உண்மையை பேசுகின்றான் என்பதாலா..? அவனின் உண்மையும், தியாகமும் ஏன் உங்களை உறுத்துகிறது? அந்த உறுத்தலின் வடிவம் தானே உங்களது மெளனம்?
வண்டி கிளம்பியது. கனத்த மவுனத்துடன் அந்த சிறை மதிற்சுவர்களை பார்த்தேன். காற்று வேகமாக வீசியது.. அந்த காற்று.. .சிறை மதிற்சுவர்களை தாண்டியும் வீசும்.
காற்றை கைது செய்ய முடியுமா என்ன?.
சீமான் பிரபாகரன் சந்திப்பு
- 2008 ல் போர்சுசூழலில் இலங்கை சென்று பிரபாகரனை சந்தித்து வந்தார்.ஈழத்திற்கு வந்த சீமான் கிளிநொச்சியில் தங்க வைக்கப்பட்டார். தலைவருடனான சந்திப்பும் நடந்தது. போராளிகள் மற்றும் தளபதிகளுக்கு முன்னால் உரையாற்றும் வாய்ப்பும் சீமானுக்கு வழங்கப்பட்டது.கிளிநொச்சியில் அமைந்திருந்த தமிழீழ நுண்கலைக் கல்லூரியின் மண்டபத்தில் சீமான் உரையாற்றினார். தந்தை பெரியாரையும் தலைவர் பிரபாகரனையும் ஒப்பிட்டு சீமான் பேசினார். அன்று தந்தை பெரியார் தமிழர்களுக்கு எப்படியான போராட்டங்களை நடத்தினார் என்பதை விளக்கினார். தலைவர் பிரபாகரன் நடத்துகின்ற போராட்டம் பற்றி புகழ்ந்துரைத்தார்.மூன்று வாரங்கள் ஈழத்தில் தங்கிய சீமான் உரைகளை எல்லாம் கிளிநொச்சியில் நிகழ்த்தி விட்டு, தமிழ்நாடு திரும்பினார்.
- சீமானின் ஈழப்பயணம் குறித்து திராவிட இயக்கங்கள் அவதூறு பேசிவந்தன. சீமான் ஈழம் செல்லவில்லை எனவும் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படங்கள் போலியானவை என்றும் கூறிவந்தனர். இதனை தொடர்ந்து 2025ல் விடுதலை புலிகள் இயக்கம் சீமானுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.அதில் சீமானின் ஈழப்பயணம் உண்மை என குறிப்பிட்டிருந்தது
- 2009 கூட்டமொன்றில் பங்கேற்க சென்ற சீமானின் காரை காங்கிரஸ் கட்சியினர் இடித்து சேதப்படுத்தினர்.
தளபதி சூசையின் பேச்சு

2009, மே மாதம் 18 -ம் நாள் மதுரையில் சீமான் தலைமையில் இளைஞர்களும் தமிழ் ஆர்வளர்களும் ஈழப்போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கேட்டும் இலங்கை இந்திய அரசை கண்டித்தும் ஒன்று கூடினர். இதே நாளில் ''நாம் தமிழர் இயக்கம்'' என்ற இளைஞர் இயக்கத்தை சீமான் மதுரையில் துவக்கினார். இது சி.ப.ஆதித்தனார் ஆரம்பித்த ''நாம்தமிழர் கட்சியின்'' தொடர்ச்சியே என்றார்.
மே18 முள்ளிவாய்க்கால் இன எழுச்சிநாள் நிணைவுக்கூடுகை அனுசரிப்பு
2009 அறுத்தெறிவோம் வாரீர் இன எழுச்சி நிணைவுக்கூடுகை - மதுரை
![]() |
அறுத்தெறிவோம் வாரீர் கூடுகை - 2009 ஜூலை 18 |
![]() |
அறுத்தெறிவோம் வாரீர் பேரணியில் சீமான் |
![]() |
பதாகை |
![]() |
பதாகை |
![]() |
பதாகை |
![]() |
மேடையில் சீமானின் பேச்சு |
இராசராச சோழனின் நினைவிடத்தில் சீமான்
25-10-2009 அன்று குடந்தையில் உடையாளூரில் உள்ள மாமன்னர் ராசராசசோழனின் நினைவிடத்தில் சீமான் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். நினைவிட சீமான் அவர்களுக்கு நாம் தமிழர் இயக்கத்தின் குடந்தை கிளை சார்பாக அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
2010 இன எழுச்சிநாள்
![]() |
2010 மே18 இன எழுச்சி நாள் அனுசரிப்பிற்கு அழைப்பு விடுத்த சீமான் |
2011 இன எழுச்சிநாள் - வேலூர்
![]() |
சுப.முத்துகுமார் படத்துடன் இனயெழுச்சிநாள் பேரணி 2011 |
![]() |
2011 இன எழுச்சி கூட்டம் வேலூர் -சீமான் உரைவீச்சு |
2012 இன எழுச்சிநாள் - கோயமுத்தூர்
2013 இன எழுச்சிநாள் - கடலூர்
![]() |
யாசின் மாலிக் உடன் சீமான் மே 18 2013 |
2014 இன எழுச்சிநாள் - காஞ்சிபுரம்
2015 இன எழுச்சிநாள்
2016 இன எழுச்சிநாள்
![]() |
முள்ளிவாய்கால் நிணைவேந்தல் - இலங்கை வடக்குமாகான முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் 2016 |
2017 இன எழுச்சிநாள் - பாம்பன்
![]() |
2017 இன எழுச்சிநாளில் பாம்பனில் சீமான் |
2018 இன எழுச்சிநாள்
======================================================================
நடிகர் ஜெயராமன் வீடு தாக்குதல்
- 2010 பிப்ரவரி 8ம் நாள் சீமான் மீது வழக்கு தொடரப்பட்டது. ''கருத்த தடித்த எருமைபோன்ற தமிழ்பெண்கள்''- என்று கூறிய மலையாள நடிகர் ஜெயராமன் வீட்டை நாம் தமிழர் இயக்கத்தினர் தாக்கியதாக 12 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சீமான் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டது, இதை பற்றி தினமலர் நாளிதழில் வெளியான செய்தி.
======================================================================
சுப.முத்துக்குமாருடன் சீமான் நட்பு
- 2009 சுப.முத்துக்குமார் நாம் தமிழர் இயக்கத்தில் இணைந்தார்; விடுதலைப்புலியும், சீமானின் நண்பருமான சுப.முத்துக்குமார் தனது திராவிட கருத்தியலுக்கு கட்டுப்பட்ட தமிழ்தேசியகொள்கையிலிருந்து வெளியேறி ஒற்றைத்தமிழ்தேசியகொள்கையை மட்டும் ஆதரித்து நாம் தமிழர் இயக்கத்தில் இணைந்தார்.
![]() |
சீமான் |
- சுப.முத்துக்குமார் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனால் தமிழகத்தில் 'தமிழ்த் தேசிய மீட்புப் படை’ என்ற அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டவர். இவர் இலங்கையில் விடுதலைப்புலிகளிடம் பயிற்சிபெற்று 1989 - ஆம் ஆண்டு முதல் 1994 வரையிலான ஐந்தாண்டு காலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர். பின்பு தமிழகம் வந்து தமிழ்த் தேசிய மீட்புப் படையின் அமைப்பை பலப்படுத்தினார் . பின்பு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். தடா சட்டத்தில் சிறைக்கு சென்று, குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டார். வீரப்பனோடு சேர்ந்து காட்டிற்கு சென்றார். வீரப்பனின் 'வெள்ளி திருப்பூர்' காவல் நிலைய தாக்குதலில் வழக்கில் சேர்க்கப்பட்டார். மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். 'தமிழ் விடுதலைப் படை' மாறனுடன் இணைந்து தமிழக உணர்வாளர்களை ஒன்றிணைக்கும் வேலைகளை செய்தார். கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட நிலையில், வீரப்பன் வைத்த நிபந்தனைகளில் ஒன்று முத்துக்குமார் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதாகும்.
![]() |
சுப.முத்துக்குமாருடன் சீமான் |
- புலிகளின் யுத்த கால கட்டங்களில் மருந்துப் பொருட்களை மணல் மேடு வழியாக இலங்கைக்கு அனுப்பி வந்தார், ஒரு முறை இரவு வரை காத்திருந்து படகு கரைக்கு வராததால் விடியற்காலை பொழுது சிலர் தகவல் கொடுக்க விரைந்து வந்த காவல் துறை முத்துக்குமாரை பொடா சட்டத்தின்கீழ் கைதுசெய்தனர். பின்பு வெளியே வந்த பின்னரும் முத்துக்குமார், சீமானுடன் இணைந்து இறுதி கட்ட யுத்தங்களில் படுகாயம் அடைந்த பொது மக்களுக்கு ரத்தம் மற்றும் மருந்து பொருட்கள் அனுப்பிவைத்தனர். மருபடியும் காங்கிரஸ்- திமுக அரசின் அடக்குமுறையால் கைதுசெய்யப்பட்டார். பின்னர் திராவிடர் கழகம், திராவிட கட்சி என எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு நாம் தமிழர் இயக்கத்தில் இணைந்து அதன் மாநில ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, கட்சியை வலுப்படுத்தினார்.
அருவாளால் வெட்டிக்கொல்லப்பட்ட முத்துக்குமார் - சட்டமன்ற தேர்தல் 2011-ல் சுப.முத்துக்குமார் காங்கிரஸ் கட்சியின் நடுவன் அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டார்.இதனால் அவருக்கு வாக்குவங்கி வெகுவாக சரிந்தது, ஓட்டு எண்ணிக்கையில் சிதம்பரம் தோல்வி என்று ஊடகங்கள் அறிவித்த சில நிமிடங்களில் வெற்றியாக அறிவிக்கப்பட்டது , சிதம்பரம் நடுவன் அமைச்சராக தொடரவேண்டிய கட்டாயம் இருந்தபடியால்! . பின்னர் சுப.முத்துக்குமாரை அச்சுருத்திவந்த தி.மு.க - காங்கிரஸ் ஆதரவாளர்கள் அவரை வெட்டி கொலைசெய்ததாக பெ.மணியரசன் குறிப்பிட்டார்
சுப.முத்துக்குமார் மறைவிற்கு கதறியழுத சீமான்
மேலும் தகவலுக்கு ; சீமானை அச்சுருத்துவதாக காங்கிரஸ்-திமுக கட்சியினரின் பின்னனியில் சுப.முத்துக்குமார் கொல்லட்டார் http://tamilthesiyam.blogspot.in/2011/02/blog-post_8838.html
======================================================================
![]() |
03.05.2010 - தி இன்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்ட படம். |
சீமானின் நூல்கள்
- 2010 தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் 'எனது மீனவனை அடித்தால்! நான் உனது சிங்கள மாணவனை அடிப்பேன்' என பேசிய சீமானை 15.07.2010 அன்று தமிழக காவல்துறை கைது செய்து அவரைத் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வேலூர் சிறைச்சாலையில் அடைத்தது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட சீமான், ''வென்றது ஆரியம், துணை நின்றது திராவிடம்'' என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதினார்.
![]() |
சீமான் பதில்கள் - இடும்பாவனம் கார்த்திக் |
ஈழத்தாயின் திருச்சாம்பல்
![]() |
சீமான் வீட்டிலுள்ள ஈமக்கலயங்கள் |
- 2010 ஏப்ரல் 16ம் நாள் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் (வயது 80) மலேசிய தலைநகர் கோலாலம்பூரலிரிந்து சென்னைக்கு பக்கவாத நோய் சிகிச்சைக்காக வந்தார். மிகுந்த உடல்நலக்குறைவோடு வந்த அவரை இந்திய அரசு மருத்துவசிகிச்சைக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது.இதைபற்றி அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டதற்கு ''பார்வதியம்மாள் வந்தது எனக்கு இரவு 12 மணிக்குதான் தெரியும், எனவேதான் இதனைச்சொல்லி வைகோவை விமானநிலையத்திற்கு அனுப்பிவைத்தேன்'' என்றார்.ஆனால் மலேசியாவிலிருந்து பார்வதியம்மாள் கிளம்பும்போதே அவரின் உதவியாளர் விஜயலட்சுமி கருணாநிதியிடம் தொலைபேசிவழியாக பேசிவிட்டுதான் வந்ததாக குறிப்பிட்டார்.மீண்டும் மலேசியாவுக்கே திரும்பிய அவர்கள், ஒரு மாதத்துக்குப் பிறகு இலங்கை சென்று வல்வட்டிதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார்.2011 பிப்ரவரி 20ம் தேதி சிகிச்சைபலனின்றி பாரவதியம்மாள் மரணமடைந்தார். அவரின் ஈமச்சாம்பலை சீமான் பூசையரையில் வைத்துள்ளார்.
சீமான் வீட்டு பூசையரையில் மாவீர்ரகள்
- 2010, மே 10-ம் நாள் 'நாம்தமிழர் இயக்கம்' 'நாம்தமிழர் கட்சியாக' உருவெடுத்தது. தஞ்சையில் நாம்தமிழர் கட்சி கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.
- 2010, டிசம்பர் 27-ம் நாள் 'உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி' மற்றும் 'நீங்கதான் சாவி' ஆகிய இரு நூல்களை வெளியிடும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராய் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்.
======================================================================
பால் நியூமன் (Paul Newman) நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்
- 2011 ஆம் ஆண்டு மனிதவுரிமை செயல்பாட்டாளர் பால்நியூமன் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்.
28.9. 2010 ல் ''புலம் பெயர்க்கப்பட்ட தமிழர்களும் மனித உரிமை மீறல்களும்'' என்ற தலைப்பில் திருச்சியில் மாணவர் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது.அதில் ஐயா பழ.நெடுமாறனுடன் பால் நியூமன் |
- ஐயா பழ.நெடுமாறனுடன் இணைந்து செயலாற்றிவந்த பால் நியுமன் ஈழத்தமிழர் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவந்தார்.
- மே17 இயக்கத்தின் இணைந்து செயல்பட்டார்.(மே17 இயக்கத்தின் 28.02.2010 கூட்டத்தில் பால் நியூமன் மே17 கூட்டம் 28.02.2010
- இவர் Unfettered Genocide in Tamil Eelam என்ற நூலின் ஆசிரியரும் ஆவார்.
பால் நியூமன் எழுதிய நூல்
டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தில் பால் நியூமன் அறிக்கையும் நாம் தமிழர் கட்சி மீதான குற்றச்சாட்டும்;
![]() |
டப்ளினில் நடைபெற்ற நிரந்தர மக்கள் தீர்ப்பின் அறிக்கை |
======================================================================
வரலாற்றுத் தோல்வியை சந்தித்த காங்கிரஸ்
- 2011 ஏப்ரல் 13 ல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது, தேர்தலுக்கு குறுகியகாலமே இருந்தது.காங்கிரஸ் கட்சி தி.மு.க கூட்டணியில் 63 தொகுதிகளில் நிற்பதாகவும் அத்தொகுதிகளின் பட்டியலையும் வெளியிட்டது.
![]() |
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் அமைப்பினரால் ஒட்டப்பட்ட நோட்டிஸ் |
- 2011 ஆம் ஆண்டு வெளிவந்த உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தில் சார்லஸ் ஆண்டனி வேடத்தில் நடித்துள்ளார்
- 2011 ஆம் ஆண்டு பெரியாரிய மேடையில் பேசிய நாத்தீக பேச்சுக்கள் துண்டுதுண்டாக வெட்டி கடவுள் மறுப்பு பிரசாரத்தை மட்டும் இணையத்தில் பரப்பினர். சீமான் பேசிய காணொளிகள் கோவை பெரியார் திராவிடர் கழகத்தில் சேமித்துவைக்கப்பட்டிருந்தது. சீமான் காங்கிரஸ்- திமுக எதிர்ப்பு பரப்புரை செய்ததால் இங்கிருந்து சிலரால் இக்காணொளிகள் யூ-டியூப் இணையத்தில் பரப்பப்பட்டன
![]() |
2016 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மூன்றுமாதங்களுக்கு முன் ஒட்டப்பட்ட போஸ்ட்டரில்
சீமான் 2008ம் ஆண்டு பெரியாரிய மேடையில் பேசிய பேச்சுக்களை வைத்து போஸ்ட்டர் ஒட்டப்பட்டன. சீமான் 2016 சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்றார்.
மேலும் தகவல்களுக்கு ; விகடன் 20.02.2016 |
இயற்கைபேரறிஞர் நம்மாழ்வார் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்
- 2011 ஆம் ஆண்டு இயற்கைபேரறிஞர் நம்மாழ்வார் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்.
- 2011 ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல்நாளில் தமிழ்நாட்டின் இடிந்தகரையில் இந்திய காங்கிரஸ் + தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்ட அணுவுலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரை மக்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு முதலில் ஆதரவுதெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்ட அரசியல்வாதி சீமான் மட்டுமே.
- 2011 ஆம் ஆண்டுகளில் திராவிட கொள்கையால் தமிழர்கள் இனப்பற்றை இழந்து தங்கள் உரிமைகள் பலவற்றை இழந்து காணப்படுவதாக கூறி, கடுமையாக திராவிட எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபட்டார். ''தமிழுணர்வை திராவிடவுணர்வு நீர்த்துபோக செய்தது'' ,திராவிட கொள்கைகளுக்கு மாற்று தமிழ்தேசியக் கொள்கையே,என பரப்புரை செய்தார்.
![]() |
முல்லைபெரியாரு நீர் உரிமை பிரச்சணையில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தி கைதான சீமான். |
- 2011 டிசம்பர் 20 ஆம் தேதி முல்லைப்பெரியாற்று நீர் உரிமை பிரச்சனையில் தமிழர்களை தாக்கிய மலையாளிகளை எதிர்த்து போராட்டம் நடத்தி சிறைசென்றார்.2011 டிசம்பர் முல்லைபெரியாரு போராட்டத்தின்போது சீமான் பேசிய பேச்சு
- 2013 மார்ச் மாதம் (19.03.2013) ஜெனிவாவில் நடைபெற்ற 22-வது (UNHRC) ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றார் சீமான்.
======================================================================
சீமான் திருமணம்
- 2013 செப்டம்பர் மாதம் அதிமுக கட்சியை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை திருமணம் செய்து கொண்டார். பழ.நெடுமாறன் தலைமையில் தமிழ்முறைப்படியாக திருமணம் நடைபெற்றது.
- திருமணம் நடைபெற்ற மறுநாளே சீமான் - கயல்விழி இணையர், கூடங்குளம் அணுவுலை போராட்டல் மக்கள்முன் தோன்றினர்.

======================================================================
டெல்லி ஜந்தர்மந்தர் போராட்டம்
சீக்கிய இனப்படுகொலை 3௦ஆவது வருட நினைவேந்தல் பேரணியில் புதுதில்லியில் நாம் தமிழர் கட்சி
வீரத்தமிழர் முன்னணி
- 2015 பிப்ரவரி ஏழாம் நாளில் வீரத்தமிழர் முன்னணி என்ற கிளை அமைப்பினை சீமான் உருவாக்கினார். பண்பாட்டு மீட்சிக்காக இவ்வமைப்பு துவக்கப்பட்டதாக சீமான் அறிவித்தார்.பண்பாட்டு புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது என்ற தத்துவத்தை முன்வைத்து இவ்வமைப்பு இயங்கியது.
- இவ்வமைப்பின் சார்பாக
- திருமுருகப் பெருவிழா,
- மாயோன் பெருவிழா,
- கண்ணகிப் பெருவிழா போன்ற தமிழர் மெய்யியல் விழாக்களும்,
- கிராம பூசாரிகள் மாநாடு என்ற தமிழர் வழிபாடு குறித்த மாநாடும்,
- மரபுவழி உழவு, உணவுத்திருவிழா,
- இளநீர் குடிக்கும் திருவிழா
- வேல்பேரணி, காவடிபேரணி.என பல விழாக்களும் நடத்தப்பட்டன.
திருமுருகப் பெருவிழா
வீரத்தமிழர் முன்னணி சார்பாக ஆண்டுதோரும் தமிழ்கடவுள் முருகனுக்கு விழா நடத்தவேண்டும் என முடிவு செய்யப்பட்டு முதன்முதலாக தமிழ்கடவுள் முருகன் என்ற பதம் வீரத்தமிழர் முன்னணியால் அரசியல் படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டின் முதல் தமிழர் மெய்யியல் கருத்தியல் சார்ந்த வேல்பேரணி நடத்திய வரலாற்று பெருமையும் வீரத்தமிழர் முன்னணியை சேரும்
திருமுருகப் பெருவிழா 2016 திருப்பரங்குன்றம்;
2016ம் ஆண்டு இதுவரை தமிழ் மண்ணில் பல ஆண்டுகளாக மத அரசியல் செய்யும் கட்சிகளும் இயக்கங்களும் முன்னெடுக்காத முக்கிய நிகழ்வினை மீட்டெடுத்தது வீரத்தமிழர் முன்னணி. சங்க காலத்தில் தமிழர்களின் வழிபாட்டு முறையிலான திருமுருகப்பெருவிழாவினை ஆச்டுதோரும் நடத்தவேண்டும் என்ற அந்த நிகழ்வு வரலாற்றுச்சிறப்பு மிக்கது.27.01.2016 ஆம் ந
`````````````````````````````````````````````````````````````
வீரத்தமிழர் முன்னணியால் தமிழகத்தில் ஏற்பட்ட தாக்கம்
முருகனுக்கு முதன்மை இடம்; வீரத்தமிழர் முன்னணி அமைப்பு உருவாகின சிலகாலங்களிலேயே தமிழர்களின் தனித்த வழிபாட்டுக்கூறான முருகவழியை முதன்மைப்படுத்தி பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டது. மலையாள மக்கள் சுவாமி ஐயப்பனுக்கு கொடுக்கும் முன்னுரிமைபோல, தெலுங்குமக்கள் வெங்கடாசலபதிக்கு கொடுக்கும் முக்கியத்துவம்போல அதனினும் பழமைவாய்ந்த முருகவழிபாட்டிற்கு தமிழர்கள் முக்கியத்துவமும் முன்னுரிமையும் தருதல் அவசியமாக கற்பிக்கப்பட்டது. முருகன் தமிழர்களின் தெய்வம் என்பதை உறுதிபடுத்தவும் ஆவனமாக்கவும் முப்பாட்டன் முருகன் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டன.
வீரத்தமிழர் முன்னணியின் தொடர் பரப்புரையால் அண்டை மாநிலங்களுக்கு வழிபாட்டிற்காக செல்லும் தமிழர்களின் கூட்டம் வெகுவாக குறைந்துபோனது.ஆறுபடைவீடுகளில் கூட்டம் அதிகரிக்கத்துவங்கியதை பெரும்மாற்றமாகவே பத்தரிக்கைகள் பேசிக்கொண்டன.
தமிழ் வழிபாட்டிற்கான போராட்டம்;
தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கை தமிழில் நடத்தவேண்டும்படி வீரத்தமிழர் முன்னணி சார்பாக வழக்குதொடரப்பட்டு தமிழ்நாட்டில் முதன்முதலாக தமிழில் குடமுழுக்கு நடத்தி வெற்றி கண்டனர்.
⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱
மாயோன் பெருவிழா
- 2015 செப்டம்பர் 14 ஆம் தேதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக நடைபெற்ற மாயோன் பெருவிழா கூட்டத்தில் செஞ்சிக்கோட்டை மீட்புபோராட்டம் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. செஞ்சிக்கோட்டை கோனேறிக்கோன் என்ற தமிழ்மன்னனால் கட்டப்பட்டதால் ''கோனேறிக்கோன் கோட்டை'' என அழைக்க உறுதியேற்றனர். இவ்விழாவில் பேசிய சீமான் ;
'' முல்லை நிலத் தலைவனாக கண்ணன் போற்றப்படுகிறார். ' மாயோன் மேய காடுறை உலகு' என்று தொல்காப்பியம் போற்றுகிறது எனவே நமது மாயோன்தான் கிருஷ்ணராக வழிபடப்படுகிறது '' -என்றார்.
![]() |
மாயோன் பெருவிழா போஸ்ட்டர்கள் |
⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱
கிராம்பூசாரிகள் மாநாடு
- 2015 ஆகஸ்ட் மாதம் 30 ம் தேதி திருப்பூரில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக கிராம பூசாரிகள் மாநாடு நடத்தப்பட்டது.300 க்கும் மேற்பட்ட ஊர்பூசாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱
திருமுருகப் பெருவிழா
- 2016 ஜனவரி 27 ம் தேதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக மதுரையில் அறுபடைவீடுகளில் ஒன்றான திருப்பறங்குன்றத்தின் திருமுருகப்பெருவிழா நடத்தப்பட்டது.
⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱
மரபுவழி உழவு மற்றும் உணவுத் திருவிழா
- 2016 செப்டம்பர் 18 ம் தேதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக மரபுவழி உழவு மற்றும் உணவித்திருவிழா நடத்தப்பட்டது. இவ்விழாவிற்கு ஜாதவ் மோலை பெயிங் என்ற மரபுவழி வேளாண் அறிஞரும், ஹிப் ஹாப் ஆதியும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱
இளநீர் குடிக்கும் திருவிழா
⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱⟱
வேல் பேரணி,காவடி பேரணி
![]() |
வேல் பேரணியில் விடுதலைப்பாவலர் அறிவுமதி |
![]() |
வேல் சங்கம யாத்திரை கூட்டத்தில் எச்.ராஜா |
தைபுரட்சியில் சீமானின் பங்கு
- தமிழ்நாட்டில் முதன்முதலாக தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியது சீமான்தான்
- 2014 மே 8 இல் சல்லிக்கட்டு மீதான தடை என்பது தமிழர் பண்பாட்டின் மீதான் அத்துமீறல் என்று சீமான் அறிக்கை வெளியிட்டார். ஆதாரம்; சல்லிக்கட்டு மீதானதடை தமிழர் பண்பாட்டின் மீதான அத்துமீறல் - சீமான்
- 25.5.2014 சீமான் நடத்திவந்த "மக்கள் முன்னால்" நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு பற்றிய விவாதத்தை நடத்தினார் .ஆதாரம்; https://www.youtube.com/watch?v=5vTspDIKcbo
- 2015 சனவரி 16 இல் சல்லிக்கட்டுக்கு அனுமதி தராவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று சீமான் எச்சரித்தார். ஆதாரம்; ஜல்லிக்கட்டு தடை! மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் - சீமான்
- 2016 சனவரி 19 இல் மதுரைமாவட்டம் பாலமேட்டில் தடையைமீறி சல்லிக்கட்டு நடத்தவிருந்த சீமானும் நாம் தமிழர் கட்சியினரும் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். ஆதாரம்; தடையைமீறி ஜல்லிக்கட்டு நடத்தமுயன்ற சீமான் கைது!
- மார்ச் 23 ஆம் தேதி சீமானால் வெளியிடப்பட்ட நாம் தமிழர் கட்சியின் செயல்பாட்டு வரைவில் சல்லிக்கட்டின் அவசியமும் நாட்டுமாட்டின் பாதுகாப்பும் பற்றி விரிவாக விளக்கம் தரப்பட்டிருந்தது. ஆதாரம்; செயல்பாட்டு வரைவு
- 27.12.2016 அலங்காநல்லூரில் போராட்டத்தை சீமான் துவக்கிவைத்தார். ஆதாரம்; https://www.youtube.com/watch?v=15sGf5558rE
- 11.01.2017 அன்று கடலூரில் திருவந்திபுரம் மலையை ஒட்டியுள்ள பகுதியில் நாம் தமிழர்கட்சி சார்பாக தடையைமீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. ஆதாரம்; 1.) https://www.youtube.com/watch?v=IappkxfBcsg 2.) https://www.youtube.com/watch?v=ikp2j3z_ccc
- 17.01.2017 அன்று காலை அலங்காநல்லூர் உண்ணாநிலை போராட்டத்தின் பத்தாவது நாள் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தது காவல்துறை. இதனைத்தொடர்ந்து இச்செய்தி மலமலவென அண்டை ஊர்களில் பரவ மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து இளைஞர்கள் மெரினா கடற்கறையில் குவியத்துவங்கினர். அதுதான் தைபுரட்சியின் முதல்நாள். ஆதாரம்; ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முதல்நாள்
- 2017 சனவரி 21 இல் மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் நாம் தமிழர் கட்சியால் தடையை மீறி சல்லிக்கட்டு நடத்தப்பட்டது. சீமானின் தலைமையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு சீமான் பரிசுகளும் வழங்கினார் ஆதாரம்; சீமான் தலைமையில் ஜல்லிக்கட்டு
- 23.1.2017ஜல்லிக்கட்டு போராட்ட இறுதிநாளில் போலிசாரின் அடக்குமுறைமீரி மெரினா கடற்கரையில் பட்டினியாய் போராடிய மாணவர்களுக்கு, போலீசாருக்கே தெரியாமல் மாற்றுவழியில் சென்று உணவுவழங்கிய சீமான். ஆதாரம்; https://www.youtube.com/watch?v=KYptbHbT00g
![]() |
சீமானின் பேச்சுக்கள் வெகுவான இளைஞர்கள் நடுவே ஒரு விளிப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளது. சீமானை ஏற்பவர்களும் அல்லது அவரை விமர்சிப்பவர்களும் பெரும்பாலும் இளைஞர்களே. |
![]() |
காவிரிச் செல்வன் விக்னேஷ் எழுதியுள்ள கடிதம் |
- 2017 ஆம் ஆண்டைய நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் அட்டை வினியோகம் சுமார் எட்டு லட்சத்திற்கும் மேலாக இருந்தது. அதில் 25 வயதிற்கு உற்பட்ட இளைஞர்களே மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் ஆவர்.
![]() |
தமிழ்நாட்டில் கனிசமான அளவிலான இளைஞர்களை தன்னகத்தே கொண்டது நாம் தமிழர் கட்சி. அதற்கு சீமானின் பேச்சு மிகமுக்கிய காரணியாக அமைந்துள்ளது |
சீமான் உயர்த்தும் கரங்களில் ஒளிரும் வெளிச்சம்
- மணிசெந்தில்
![]() |
சீமான் உயர்த்தும் கரங்களில் ஒளிரும் வெளிச்சம் - நூல் எழுதிய மணிசெந்தில் |
![]() |
சே.பாக்கியராசன் என்பவரால் எழுதப்பட்ட புத்தகம் |
சீமான் பதில்கள் - இடும்பாவனம் கார்த்திக்
![]() |
சீமான் பதில்கள் - இடும்பாவனம் கார்த்திக் |
![]() |
சீமான் என்னும் புரட்சியாளன்
- ஆ.மதுசூதனன்
![]() |
மதுசூதனன் |
![]() |
கல்லூரிகளில் அரசியல்பேச தடையும் - அதன் பின்னணியும்
- 2018 ஏப்ரல் 25ஆம் நாள் தமிழக அரசால் கல்லூரிகளில் அரசியல் பேசுவதை தடைசெய்வித்து ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.அரசியல் கட்சி தலைவர்கள் கல்லூரிவிழாக்களில் பங்கேற்று அரசியல்தொடர்பான கருத்துக்களை பேசுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.சீமான் தொடர்ச்சியாக பல கல்லூரிகளில் தமிழ்தேசியம் தொடர்பான கருத்துக்களை மாணவர்களிடையே பரப்பியதும் ஒரு காரணமாக கூறப்பட்டது.
அருமையான பதிவு நன்றி
ReplyDeleteமிக அருமை
ReplyDeleteஇலக்கு ஒன்று தான் என் இனத்திற்கு விடுதலை
ReplyDeleteநாம் தமிழர்
அருமை
ReplyDeleteநன்றி
வீழ்ந்து விடாத வீரம் மண்டியிடாத மானம்
ReplyDeleteவெற்றி வெகு விரைவில்
ReplyDeletewow! Seeman is a great leader for history and for tamil nafu future. Blogger is very fentastic nice page.
ReplyDeleteஉத🤔ரு தாமதம் உடனே விழி தமிழா!!🤔
ReplyDeleteதமிழினத்தை தலைநிமிர்த்தும் பயணம்
ReplyDeleteஅருமையான தொகுப்பு
ReplyDeleteவாழ்த்துக்கள் தொகுப்பாளருக்கு
அருமை நண்பா
ReplyDeleteIn 20 years Mr SEEMAN has created a history of 100 years. The speciality and the investment are his, "THOUGHTS AND TAMIZ PATRU"
ReplyDeleteAs he use to say he may be vanished BUT HIS PRINCIPLES WILL NEVER - DIE.
மிக அருமை 👌
ReplyDelete