வீரத்தமிழர் முன்னணி அமைப்பு

வீரத்தமிழர் முன்னணி வரலாறு

``````````````````````````````````````````````````````````````````````````





வீரத்தமிழர் முன்னணி என்பது தமிழர்களின் மெய்யியல் சார்ந்த பண்பாடு மற்றும் வழிபாட்டுக்கூறுகளை  மீட்க உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.இவ்வமைப்பின் சார்பாக வேல்வீச்சு என்ற இதழும், தமிழம் என்ற நூல் வெளியீட்டு பதிப்பகமும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.


திராவிடம் என்ற பெயரால் எப்படி வேற்றினத்தவர்கள் தமிழகத்தில் கோலோச்ச முடியுமோ, அதுபோலவே இந்து என்ற பெயரால் தமிழகத்தின் வணிகங்களிலும் அதிகார நிலைகளிலும் தமிழர் அல்லாத வேற்றினத்தவர்கள் கோலோச்சிடமுடியும். தேசிய கட்சிகளான காங்கிறசும், பாரதிய ஜனதா கட்சியும் இதர தேசிய அமைப்புக்களும் வேற்றுமாநிலத்தவர்களின் தமிழகத்தின் மீதான் ஆளுமையை ஒருபோதும் பேசிவிட முடியாது, அதுபோலவே திராவிட கட்சிகளும், திராவிட இயக்கங்களும் தமிழர் அல்லாதோரை தலைமை கொண்டுள்ளதால் அவற்றாலும் வேற்றுமாநிலத்தவர்களின் நுழைவினையோ, அவர்களின் அதிகாரபோக்கினையும் பேசவிட முடியாது. 

சீக்கியர்கள் தங்கள் இனத்தின்  பண்பாட்டினை காத்துக்கொண்டதற்கு முக்கிய காரணம் தாங்கள் சீக்கிய இனத்தவராகவும், தங்களின் தனித்த வழிபாட்டுக்கூறுகளை சீக்கியம் என்ற மதமாகவும் வகுத்துக்கொண்டதாலேயே அவர்கள் தங்களின் இனத்தை காத்துக்கொண்டனர். சீக்கியர்களின் மதமும் இனமும் சீக்கியம் என்ற ஒரே சொல்லால் குறிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது போல, தமிழர்களின் பண்பாடு வழிபாட்டுமுறையும் தமிழம் என்ற ஒரு குடையின்கீழ் பாதுகாக்க உருவாக்கப்பட்டதே வீரத்தமிழர் முன்னணி என்ற அமைப்பு ஆகும். 

தமிழகத்தில் சிவநெறி என்பது தமிழர்களின் சொந்த மதமாகும். இந்தியா முழுவதும் சிவனிய நெறிகள் காணப்பட்டாலும், தென்னாடுடைய சிவன் ஒரு தமிழ் கடவுளாகவும் முதல் தமிழ்சங்கத்தின் தலைவனாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார். இந்த பெருமை இந்தியாவில் எந்த இனத்திற்கும் கிடையாது. இந்து என்ற பெயரால் தமிழகத்திலுள்ள சைவ ஆதீனங்களில் வேற்றினத்தாரும், வேற்றுமொழியான சமஸ்கிருதம், இந்தி போன்ற மொழிகளின் ஆதிக்கமும் செலுத்தவிடாமல் தமிழர்களையும், தமிழையும் தொடர்ந்து முந்நிலைப்படுத்துவது மிகவும் அவசியப்படுகிறது. இதற்கான ஒரு அமைப்பு இங்கே தேவைப்படுகிறது.
---------------------------------------------------------------------

"தமிழர் வழிபாட்டில் உள்ள ஆரிய கூறுகளை நீக்கினால் தமிழரின் வழிபாட்டை மீட்டுவிடலாமேவொலிய திராவிடம்போல கடவுள் இல்லை என்று இன்னும் கூறிக்கொண்டிருந்தால் ஆரியத்துவா அரசியல் அதிகமாகத்தான் தமிழகத்தில் நிலைப்பெரும். அதனை வீழ்த்த தமிழம் என்ற தமிழர் வழிபாட்டு ஒருங்கிணைப்பே உதவும்" 

- செந்தில்நாதன்

செந்தில்நாதன் துறைராசன்
மாநில ஒருங்கிணைப்பாளர் வீரத்தமிழர் முன்னணி
`````````````````````````````````````````````````````````````

திருமுருகப் பெருவிழா

வீரத்தமிழர் முன்னணி சார்பாக ஆண்டுதோரும் தமிழ்கடவுள் முருகனுக்கு விழா நடத்தவேண்டும் என முடிவு செய்யப்பட்டு முதன்முதலாக தமிழ்கடவுள் முருகன் என்ற பதம் வீரத்தமிழர் முன்னணியால் அரசியல் படுத்தப்பட்டது. 

தமிழ்நாட்டின் முதல் தமிழர் மெய்யியல் கருத்தியல் சார்ந்த வேல்பேரணி  நடத்திய வரலாற்று பெருமையும் வீரத்தமிழர் முன்னணியை சேரும்

திருமுருகப் பெருவிழா 2016 திருப்பரங்குன்றம்;

2016ம் ஆண்டு இதுவரை தமிழ் மண்ணில் பல ஆண்டுகளாக மத அரசியல் செய்யும் கட்சிகளும் இயக்கங்களும் முன்னெடுக்காத முக்கிய நிகழ்வினை மீட்டெடுத்தது வீரத்தமிழர் முன்னணி. சங்க காலத்தில் தமிழர்களின் வழிபாட்டு முறையிலான திருமுருகப்பெருவிழாவினை ஆச்டுதோரும் நடத்தவேண்டும் என்ற அந்த நிகழ்வு வரலாற்றுச்சிறப்பு மிக்கது.27.01.2016 ஆம் ந 






`````````````````````````````````````````````````````````````

வீரத்தமிழர் முன்னணியால் தமிழகத்தில் ஏற்பட்ட தாக்கம்




முருகனுக்கு முதன்மை இடம்; வீரத்தமிழர் முன்னணி அமைப்பு உருவாகின சிலகாலங்களிலேயே தமிழர்களின் தனித்த வழிபாட்டுக்கூறான முருகவழியை முதன்மைப்படுத்தி பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டது. மலையாள மக்கள் சுவாமி ஐயப்பனுக்கு கொடுக்கும் முன்னுரிமைபோல, தெலுங்குமக்கள் வெங்கடாசலபதிக்கு கொடுக்கும் முக்கியத்துவம்போல அதனினும் பழமைவாய்ந்த முருகவழிபாட்டிற்கு தமிழர்கள் முக்கியத்துவமும் முன்னுரிமையும் தருதல் அவசியமாக கற்பிக்கப்பட்டது. முருகன் தமிழர்களின் தெய்வம் என்பதை உறுதிபடுத்தவும் ஆவனமாக்கவும் முப்பாட்டன் முருகன் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டன.
 வீரத்தமிழர் முன்னணியின் தொடர் பரப்புரையால் அண்டை மாநிலங்களுக்கு வழிபாட்டிற்காக செல்லும் தமிழர்களின் கூட்டம் வெகுவாக குறைந்துபோனது.ஆறுபடைவீடுகளில் கூட்டம் அதிகரிக்கத்துவங்கியதை பெரும்மாற்றமாகவே பத்தரிக்கைகள் பேசிக்கொண்டன.




29.01.2019 அன்று வெளியான குமுதம் ரிப்போர்டரின் கட்டுறை










தமிழ் வழிபாட்டிற்கான போராட்டம்; 

தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கை தமிழில் நடத்தவேண்டும்படி வீரத்தமிழர் முன்னணி சார்பாக வழக்குதொடரப்பட்டு தமிழ்நாட்டில் முதன்முதலாக தமிழில் குடமுழுக்கு நடத்தி வெற்றி கண்டனர்.




நிகழ்வுகள்

இலங்கையில் உதவிக்கரம்;
30.06.2018 அன்று இலங்கை முதலைகுடா பகுதியில் ஈழமண்டல வீரத்தமிழர் முன்னணி ஏழை மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கி உதவியது.

மேலும் தகவலுக்கு; http://www.battinews.com/2018/06/blog-post_290.html




















Comments

Popular posts from this blog

சீமான் வாழ்க்கைவரலாறு - ''யார் இந்த சீமான்?'' SEEMAN Full Bio-data சீமான் பற்றிய தகவல்கள்!

VALLATTAM - வல்லாட்டம்